Thirukkuralagam
Kural 435 of 1330

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar Vaiththooru Polak Ketum

His joy who guards not 'gainst the coming evil day,Like straw before the fire shall swift consume away

விளக்கம் — மு. வரதராசன்

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

விளக்கம் — கலைஞர்

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்

Meaning (English)

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

Open the interactive app →