Kural 436 of 1330
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு?
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin Enkutra Maakum Iraikku?
Faultless the king who first his own faults cures, and thenPermits himself to scan faults of other men
விளக்கம் — மு. வரதராசன்
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
விளக்கம் — கலைஞர்
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
Meaning (English)
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.