Thirukkuralagam
Kural 443 of 1330

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.

Ariyavatru Lellaam Aridhe Periyaaraip Penith Thamaraak Kolal

To cherish men of mighty soul, and make them all their own,Of kingly treasures rare, as rarest gift is known

விளக்கம் — மு. வரதராசன்

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

விளக்கம் — கலைஞர்

பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்

Meaning (English)

To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

Open the interactive app →