Thirukkuralagam
Kural 444 of 1330

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.

Thammir Periyaar Thamaraa Ozhukudhal Vanmaiyu Lellaan Thalai

To live with men of greatness that their own excels,As cherished friends, is greatest power that with a monarch dwells

விளக்கம் — மு. வரதராசன்

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

விளக்கம் — கலைஞர்

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்

Meaning (English)

So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.

Open the interactive app →