Kural 445 of 1330
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan Soozhvaaraik Soozhndhu Kolal
The king, since counsellors are monarch's eyes,Should counsellors select with counsel wise
விளக்கம் — மு. வரதராசன்
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.
விளக்கம் — கலைஞர்
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்
Meaning (English)
As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.