Thirukkuralagam
Kural 447 of 1330

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.

Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare Ketukkun Thakaimai Yavar

What power can work his fall, who faithful ministersEmploys, that thunder out reproaches when he errs

விளக்கம் — மு. வரதராசன்

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

விளக்கம் — கலைஞர்

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

Meaning (English)

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?

Open the interactive app →