Kural 448 of 1330
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.
Itippaarai Illaadha Emaraa Mannan Ketuppaa Rilaanung Ketum
The king with none to censure him, bereft of safeguards all,Though none his ruin work, shall surely ruined fall
விளக்கம் — மு. வரதராசன்
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
விளக்கம் — கலைஞர்
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்
Meaning (English)
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.