Kural 450 of 1330
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
Pallaar Pakai Kolalir Paththatuththa Theemaiththe Nallaar Thotarkai Vital
Than hate of many foes incurred, works greater woeTen-fold, of worthy men the friendship to forego
விளக்கம் — மு. வரதராசன்
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
விளக்கம் — கலைஞர்
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்
Meaning (English)
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.