Kural 451 of 1330
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
Sitrinam Anjum Perumai Sirumaidhaan Sutramaach Choozhndhu Vitum
The great of soul will mean association fear; The mean of soul regard mean men as kinsmen dear
விளக்கம் — மு. வரதராசன்
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
விளக்கம் — கலைஞர்
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்
Meaning (English)
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.