Thirukkuralagam
Kural 454 of 1330

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.

Manaththu Ladhupolak Kaatti Oruvarku Inaththula Thaakum Arivu

Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we find

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

விளக்கம் — கலைஞர்

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்

Meaning (English)

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

Open the interactive app →