Thirukkuralagam
Kural 453 of 1330

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.

Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam Innaan Enappatunj Chol

Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known

விளக்கம் — மு. வரதராசன்

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

விளக்கம் — கலைஞர்

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்

Meaning (English)

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.

Open the interactive app →