Thirukkuralagam
Kural 500 of 1330

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.

Kaalaazh Kalaril Nariyatum Kannanjaa Velaal Mukaththa Kaliru

The jackal slays, in miry paths of foot-betraying fen,The elephant of fearless eye and tusks transfixing armed men

விளக்கம் — மு. வரதராசன்

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

விளக்கம் — கலைஞர்

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்

Meaning (English)

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.

Open the interactive app →