Thirukkuralagam
Kural 499 of 1330

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

Sirainalanum Seerum Ilareninum Maandhar Urainilaththotu Ottal Aridhu

Though fort be none, and store of wealth they lack,'Tis hard a people's homesteads to attack

விளக்கம் — மு. வரதராசன்

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

விளக்கம் — கலைஞர்

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல

Meaning (English)

It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

Open the interactive app →