Kural 506 of 1330
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.
Atraaraith Therudhal Ompuka Matravar Patrilar Naanaar Pazhi
Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin
விளக்கம் — மு. வரதராசன்
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.
விளக்கம் — கலைஞர்
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்
Meaning (English)
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.