Thirukkuralagam
Kural 507 of 1330

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும்.

Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal Pedhaimai Ellaan Tharum

By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to folly's blind control

விளக்கம் — மு. வரதராசன்

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

விளக்கம் — கலைஞர்

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்

Meaning (English)

To choose ignorant men, through partiality, is the height of folly.

Open the interactive app →