Kural 508 of 1330
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
Theraan Piranaith Thelindhaan Vazhimurai Theeraa Itumpai Tharum
Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race
விளக்கம் — மு. வரதராசன்
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
விளக்கம் — கலைஞர்
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
Meaning (English)
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.