Thirukkuralagam
Kural 520 of 1330

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.

Naatorum Naatuka Mannan Vinaiseyvaan Kotaamai Kotaa Thulaku

Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way

விளக்கம் — மு. வரதராசன்

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விளக்கம் — கலைஞர்

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்

Meaning (English)

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

Open the interactive app →