Kural 521 of 1330
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.
Patratra Kannum Pazhaimaipaa Raattudhal Sutraththaar Kanne Ula
When wealth is fled, old kindness still to show,Is kindly grace that only kinsmen know
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.
விளக்கம் — கலைஞர்
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்
Meaning (English)
Even when (a man’s) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).