Thirukkuralagam
Kural 533 of 1330

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu Eppaalnoo Lorkkum Thunivu

'To self-oblivious men no praise'; this ruleDecisive wisdom sums of every school

விளக்கம் — மு. வரதராசன்

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

விளக்கம் — கலைஞர்

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்

Meaning (English)

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Open the interactive app →