Kural 598 of 1330
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு.
Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu Valliyam Ennunj Cherukku
The soulless man can never gainTh' ennobling sense of power with men
விளக்கம் — மு. வரதராசன்
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
விளக்கம் — கலைஞர்
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை
Meaning (English)
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality “.