Thirukkuralagam
Kural 599 of 1330

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை ஦வ்ருஉம் புலிதாக் குறின்.

Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai Veruum Pulidhaak Kurin

Huge bulk of elephant with pointed tusk all armed,When tiger threatens shrinks away alarmed

விளக்கம் — மு. வரதராசன்

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.

விளக்கம் — கலைஞர்

உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்

Meaning (English)

Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

Open the interactive app →