Thirukkuralagam
Kural 607 of 1330

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.

Itipurindhu Ellunj Chol Ketpar Matipurindhu Maanta Ugnatri Lavar

Who hug their sloth, nor noble works attempt,Shall bear reproofs and words of just contempt

விளக்கம் — மு. வரதராசன்

சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

விளக்கம் — கலைஞர்

முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

Meaning (English)

Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

Open the interactive app →