Thirukkuralagam
Kural 608 of 1330

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.

Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku Atimai Pukuththi Vitum

If sloth a dwelling find mid noble family,Bondsmen to them that hate them shall they be

விளக்கம் — மு. வரதராசன்

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

விளக்கம் — கலைஞர்

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

Meaning (English)

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

Open the interactive app →