Kural 609 of 1330
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan Matiyaanmai Maatrak Ketum
Who changes slothful habits savesHimself from all that household rule depraves
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.
விளக்கம் — கலைஞர்
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்
Meaning (English)
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.