Thirukkuralagam
Kural 609 of 1330

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.

Kutiyaanmai Yulvandha Kutram Oruvan Matiyaanmai Maatrak Ketum

Who changes slothful habits savesHimself from all that household rule depraves

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

விளக்கம் — கலைஞர்

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்

Meaning (English)

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

Open the interactive app →