Thirukkuralagam
Kural 618 of 1330

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.

Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu Aalvinai Inmai Pazhi

'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man

விளக்கம் — மு. வரதராசன்

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

விளக்கம் — சாலமன் பாப்பையா

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

விளக்கம் — கலைஞர்

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்

Meaning (English)

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

Open the interactive app →