Thirukkuralagam
Kural 619 of 1330

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

Theyvaththaan Aakaa Theninum Muyarsidhan Meyvaruththak Kooli Tharum

Though fate-divine should make your labour vain; Effort its labour's sure reward will gain

விளக்கம் — மு. வரதராசன்

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

விளக்கம் — கலைஞர்

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்

Meaning (English)

Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

Open the interactive app →