Thirukkuralagam
Kural 622 of 1330

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.

Vellath Thanaiya Itumpai Arivutaiyaan Ullaththin Ullak Ketum

Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone

விளக்கம் — மு. வரதராசன்

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

விளக்கம் — கலைஞர்

வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்

Meaning (English)

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

Open the interactive app →