Kural 622 of 1330
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan Ullaththin Ullak Ketum
Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone
விளக்கம் — மு. வரதராசன்
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
விளக்கம் — கலைஞர்
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்
Meaning (English)
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.