Thirukkuralagam
Kural 621 of 1330

இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

Itukkan Varungaal Nakuka Adhanai Atuththoorvadhu Aqdhoppa Thil

Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power

விளக்கம் — மு. வரதராசன்

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

விளக்கம் — கலைஞர்

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்

Meaning (English)

If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

Open the interactive app →