Thirukkuralagam
Kural 705 of 1330

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்?

Kurippir Kurippunaraa Vaayin Uruppinul Enna Payaththavo Kan?

By sign who knows not sings to comprehend, what gain,'Mid all his members, from his eyes does he obtain

விளக்கம் — மு. வரதராசன்

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?

விளக்கம் — கலைஞர்

ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?

Meaning (English)

Of what use are the eyes amongst one’s members, if they cannot by their own indications dive those of another ?.

Open the interactive app →