Thirukkuralagam
Kural 706 of 1330

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.

Atuththadhu Kaattum Palingupol Nenjam Katuththadhu Kaattum Mukam

As forms around in crystal mirrored clear we find,The face will show what's throbbing in the mind

விளக்கம் — மு. வரதராசன்

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

விளக்கம் — கலைஞர்

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்

Meaning (English)

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

Open the interactive app →