Thirukkuralagam
Kural 754 of 1330

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.

Araneenum Inpamum Eenum Thiranarindhu Theedhindri Vandha Porul

Their wealth, who blameless means can use aright,Is source of virtue and of choice delight

விளக்கம் — மு. வரதராசன்

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

விளக்கம் — கலைஞர்

தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்

Meaning (English)

The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

Open the interactive app →