Thirukkuralagam
Kural 755 of 1330

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.

Arulotum Anpotum Vaaraap Porulaakkam Pullaar Purala Vital

Wealth gained by loss of love and grace,Let man cast off from his embrace

விளக்கம் — மு. வரதராசன்

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக

விளக்கம் — கலைஞர்

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்

Meaning (English)

(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.

Open the interactive app →