Thirukkuralagam
Kural 76 of 1330

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.

Araththirke Anpusaar Penpa Ariyaar Maraththirkum Aqdhe Thunai

The unwise deem love virtue only can sustain,It also helps the man who evil would restrain

விளக்கம் — மு. வரதராசன்

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

விளக்கம் — கலைஞர்

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்

Meaning (English)

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

Open the interactive app →