Kural 763 of 1330
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.
Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai Naakam Uyirppak Ketum
Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die
விளக்கம் — மு. வரதராசன்
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
விளக்கம் — கலைஞர்
எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்
Meaning (English)
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.