Kural 814 of 1330
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.
Amarakaththu Aatrarukkum Kallaamaa Annaar Thamarin Thanimai Thalai
A steed untrained will leave you in the tug of war; Than friends like that to dwell alone is better far
விளக்கம் — மு. வரதராசன்
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.
விளக்கம் — கலைஞர்
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்
Meaning (English)
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.