Thirukkuralagam
Kural 837 of 1330

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.

Edhilaar Aarath Thamarpasippar Pedhai Perunjelvam Utrak Katai

When fools are blessed with fortune's bounteous store,Their foes feed full, their friends are prey to hunger sore

விளக்கம் — மு. வரதராசன்

பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

விளக்கம் — கலைஞர்

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது

Meaning (English)

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

Open the interactive app →