Thirukkuralagam
Kural 838 of 1330

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.

Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan Kaiyondru Utaimai Perin

When folly's hand grasps wealth's increase, 'twill beAs when a mad man raves in drunken glee

விளக்கம் — மு. வரதராசன்

பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

விளக்கம் — கலைஞர்

நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்

Meaning (English)

A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

Open the interactive app →