Thirukkuralagam
Kural 845 of 1330

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.

Kallaadha Merkon Tozhukal Kasatara Valladhooum Aiyam Tharum

If men what they have never learned assume to know,Upon their real learning's power a doubt 'twill throw

விளக்கம் — மு. வரதராசன்

அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.

விளக்கம் — கலைஞர்

அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்

Meaning (English)

Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.

Open the interactive app →