Kural 846 of 1330
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.
Atram Maraiththalo Pullarivu Thamvayin Kutram Maraiyaa Vazhi
Fools are they who their nakedness conceal,And yet their faults unveiled reveal
விளக்கம் — மு. வரதராசன்
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
விளக்கம் — கலைஞர்
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்
Meaning (English)
Even to cover one’s nakedness would be folly, if (one’s) faults were not covered (by forsaking them).