Kural 873 of 1330
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
Emur Ravarinum Ezhai Thamiyanaaip Pallaar Pakaikol Pavan
Than men of mind diseased, a wretch more utterly forlorn,Is he who stands alone, object of many foeman's scorn
விளக்கம் — மு. வரதராசன்
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
விளக்கம் — கலைஞர்
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்
Meaning (English)
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.