Kural 933 of 1330
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.
Urulaayam Ovaadhu Koorin Porulaayam Pooip Purame Patum
If prince unceasing speak of nought but play,Treasure and revenue will pass from him away
விளக்கம் — மு. வரதராசன்
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
விளக்கம் — கலைஞர்
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்
Meaning (English)
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other’s hands.