Thirukkuralagam
Kural 954 of 1330

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.

Atukkiya Koti Perinum Kutippirandhaar Kundruva Seydhal Ilar

Millions on millions piled would never winThe men of noble race to soul-degrading sin

விளக்கம் — மு. வரதராசன்

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

விளக்கம் — கலைஞர்

பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்

Meaning (English)

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

Open the interactive app →