Thirukkuralagam
Kural 955 of 1330

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.

Vazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti Panpil Thalaippiridhal Indru

Though stores for charity should fail within, the ancient raceWill never lose its old ancestral grace

விளக்கம் — மு. வரதராசன்

தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

விளக்கம் — கலைஞர்

பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்

Meaning (English)

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).

Open the interactive app →