Thirukkuralagam
Kural 957 of 1330

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.

Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin Madhikkan Maruppol Uyarndhu

The faults of men of noble race are seen by every eye,As spots on her bright orb that walks sublime the evening sky

விளக்கம் — மு. வரதராசன்

உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

விளக்கம் — கலைஞர்

பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்

Meaning (English)

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

Open the interactive app →