Thirukkuralagam
Kural 958 of 1330

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.

Nalaththinkan Naarinmai Thondrin Avanaik Kulaththinkan Aiyap Patum

If lack of love appear in those who bear some goodly name,'Twill make men doubt the ancestry they claim

விளக்கம் — மு. வரதராசன்

ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.

விளக்கம் — கலைஞர்

என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்

Meaning (English)

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question.

Open the interactive app →