Thirukkuralagam
Kural 983 of 1330

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்.

Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu Aindhusaal Oondriya Thoon

Love, modesty, beneficence, benignant grace,With truth, are pillars five of perfect virtue's resting-place

விளக்கம் — மு. வரதராசன்

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

விளக்கம் — கலைஞர்

அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்

Meaning (English)

Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these perfect are the five pillars on which goodness rests.

Open the interactive app →