Thirukkuralagam
Kural 984 of 1330

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.

Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai Sollaa Nalaththadhu Saalpu

The type of 'penitence' is virtuous good that nothing slays; To speak no ill of other men is perfect virtue's praise

விளக்கம் — மு. வரதராசன்

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

விளக்கம் — கலைஞர்

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு

Meaning (English)

Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others’ faults.

Open the interactive app →