Thirukkuralagam
Kural 1040 of 1330

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.

Ilamendru Asaii Iruppaaraik Kaanin Nilamennum Nallaal Nakum

The earth, that kindly dame, will laugh to see,Men seated idle pleading poverty

விளக்கம் — மு. வரதராசன்

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

விளக்கம் — கலைஞர்

வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்

Meaning (English)

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.

Open the interactive app →