Thirukkuralagam
Kural 1127 of 1330

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

Kannullaar Kaadha Lavaraakak Kannum Ezhudhem Karappaakku Arindhu

My love doth ever in my eyes reside; I stain them not, fearing his form to hide

விளக்கம் — மு. வரதராசன்

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

விளக்கம் — கலைஞர்

காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்

Meaning (English)

As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

Open the interactive app →