Thirukkuralagam
Kural 1129 of 1330

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ் வூர்.

Imaippin Karappaakku Arival Anaiththirke Edhilar Ennum Iv Voor

I fear his form to hide, nor close my eyes:'Her love estranged is gone!' the village cries

விளக்கம் — மு. வரதராசன்

கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

விளக்கம் — கலைஞர்

கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்

Meaning (English)

I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

Open the interactive app →